ராம்ஜி நகர் கஞ்சா குளித்தலையில் !

0

ராம்ஜி நகர் கஞ்சா குளித்தலையில் !

குளித்தலையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது.

அவரிடமிருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல்.
கரூர் மாவட்டம் குளித்தலை நகர் பகுதி கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் ஹரிகரன் வயது 22.
பிரபல கஞ்சா வியாபாரியான ஹரிஹரன் குளித்தலை பேருந்து நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ஒரு கிலோ 600 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த போது குளித்தலை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் ஹரிஹரனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ஹரிஹரன் ராம்ஜிநகரில் கஞ்சா மொத்தமாக   வாங்கி குளித்தலையில் விற்பனை செய்யும் போது சிக்கி உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.