திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் சாமானிய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம்!
திருச்சி மாவட்ட திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் சாமானிய மக்கள் கட்சி சார்பாக மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.
அதன் பின்பு திருச்சி மாவட்டம் திருவரம்பூர் தாலுகா கீழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட காலி புறம்போக்கு இடத்தில் ஏழரை ஏக்கர் நிலத்தில் 2001 ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது மக்களுக்கு 134 பேருக்கு முறைப்படி பட்டா வழங்கப்பட்டது.
2001 ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி பட்டா வழங்கிய இடத்திற்கு 1990 ல் புது நகர் என்று மனு ரசீது பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்பட்டது.

மனு ரசீது வழங்கப்பட்ட இடம் இது நாள் வரை புறம்போக்காகவே உள்ளது. இந்த இடத்திற்கு கம்ப்யூட்டர் கணினி பட்டா வழங்க திருவரம்பூர் தாசில்தாரை அணுகினோம். மீண்டும் 28 /2 /2025 அன்று தாசில்தாரை அணுகினோம் அப்பொழுது அவர் நீங்கள் ஒரு மாதம் கழித்து வாருங்கள் என்று தட்டி கழித்தார்.
பின்னர் 25 /4 /2025 அன்று நாங்கள் தாசில்தாரை அனைவரும் சந்தித்தோம் அப்பொழுது அவர் கூறியதாவது நீங்கள் D R O வை சந்தியுங்கள் என்று கூறினார். பிறகு 25 /4/ 2025 அன்று மீண்டும் கலெக்டரை சந்தித்தோம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கலெக்டர் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வாருங்கள் என கூறுவது பட்டா வழங்க மறுப்பதாக தெரிய வருவதால் திருச்சி மாவட்ட ஆட்சியர் திருவரம்பூர் கீழக்குறிச்சி மக்களுக்கு கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எனவே பட்டா வழங்க மறுக்கப்படுவதை கண்டித்து 9/5/ 2025 வெள்ளிக்கிழமை அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருவரம்பூர் கீழக்குறிச்சி மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர்.