ரோட்டரியின் கற்றல் பேரவை !
ரோட்டரி மாவட்டம் 2981 இன் முன்னெடுப்பில், ஆர்.சி. மனோரா பட்டுக்கோட்டை மன்றத்தின் ஏற்பாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட கற்றல் பேரவையை தொடங்கி வைத்திருக்கிறார், ரோட்டர் இண்டர்நேஷனலின் துணைத்தலைவரும் இயக்குநர்களுள் ஒருவரும் எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம்.
மாவட்ட கற்றல் பேரவை குறித்து அவர் குறிப்பிடுகையில், “ரோட்டரி தலைவர்களுக்கு உத்வேகம் அளிக்கவும், கல்வி புகட்டவும், மற்றும் வலுவூட்டவும் வடிவமைக்கப்பட்ட ஒரு முதன்மைத் தளமாக இது அமைந்திருக்கிறது. ரோட்டரி மேலும் பெரிதாகவும், சிறந்ததாகவும், மற்றும் துணிச்சலானதாகவும் மாறும் தனது பயணத்தைத் தொடரும் வேளையில், சேவை, நேர்மை, மற்றும் சிறப்பு ஆகிய விழுமியங்களைக் கடைப்பிடிக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களிடமே இந்தப் பொறுப்பு உள்ளது.” என்கிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.