கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் மாணவா்கள் பயன் பெறுவதற்கு,  தேர்வுத்துறை இயக்குநர் லதா, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்த தேர்வை கிராமப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இவர்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இந்த தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.10 செலுத்த வேண்டும். மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் வரும் 14ம் தேதி முதல் 22ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பின் மாணவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் தொகுப்பறிக் கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தொிவிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தினை கிராமபுற மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தொிவிக்கப்படுகிறது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.