சேலம் ஏற்காட்டில் சாலை விபத்து 6 பேர் பலத்த காயம்

0

சேலம் ஏற்காட்டில் சாலை விபத்து 6 பேர் பலத்த காயம்

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி

சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்தை சுற்றி பார்ப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காவலர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 6 பேருடன் இன்று 18.04.2023 காலை காரில் வந்தார்.

– சோழன் தேவ்

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

பின்னர் ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு, ஏற்காட்டில் இருந்து திருவண்ணாமலை செல்ல, குப்பனூர் செல்லும் சாலை வழியாக அனைவரும் சென்று கொண்டிருந்தனர்.

குப்பனூர் நெருங்கிய நிலையில் மலைப்பகுதியில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதை ஓரம் உள்ள பாறையில் இடித்து விபத்துக்குள்ளானது .

இதில் காரில் பயணம் செய்த ஆறு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது . பெண்களுக்கு கால் முறிவும் ஏற்பட்டது .

இதனையடுத்து அனைவரும் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து ஏற்காடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.