கிராமத்து பெண்களின் கைவண்ணத்தில் பாரம்பரியமான கோரைப்பாய்கள் !
தமிழகத்தின் பாரம்பரியமான கைத்தொழில்களுள் ஒன்று கோரைப்பாய் உற்பத்தி. மக்களின் பல்வேறு வகையான அன்றாட பயன்பாட்டில் முக்கிய இடத்தை இன்றளவும் கோரைப்பாய்கள் இருந்து வருகின்றன. சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் உற்பத்தி செய்யப்படும் கோரைப்பாய்கள், கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் கதகதப்பாகவும் இருப்பது இதன் சிறப்பம்சமாகவும் பார்க்கப்படுகிறது.
என்னதான் பாரம்பரியம் என்று பேசினாலும், நவீனம் அதிலும் சில இடையூறுகளை ஏற்படுத்தவே செய்கிறது. முற்றிலும் இயந்திரமயமான வேலைப்பாடும், ரசாயன வண்ணமூட்டும் முறைகளும் சுற்றுசூழலுக்கு தீங்கிழைக்கவே செய்கின்றன. இந்த பின்னணியில்தான், காவிரி டெல்டாவின் கதகதப்பான நீர்பிடிப்பு பகுதிகளில் விளையும் கோரைப்பாய்களை அறுவடை செய்து, இயற்கையான மஞ்சள் மற்றும் அவுரிச்சாறு கொண்டு வண்ணமேற்றி சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத கோரைப்பாய்கள் உற்பத்தி செய்வதை சேவை தொண்டு நிறுவனத்தின் சேவை களஞ்சியம் ஆமூர் மையம் சிறப்பாக முன்னெடுத்து வருகிறது.
தமிழக அரசின் சிறந்த சேவை தொண்டு நிறுவனம் என்பதற்கான 2025 ஆம் ஆண்டிற்கான விருதை பெற்ற சேவை கோவிந்தராஜூவின் வழிகாட்டுதலில், முற்றிலும் கிராமப்புற பெண்களின் பங்களிப்புடன் இதன்வழியே அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டத்தை முழுமூச்சாக செயல்படுத்தி வருகிறார்கள் சேவை தொண்டு நிறுவனத்தார்.
— கிருஷ்







Comments are closed, but trackbacks and pingbacks are open.