நிலமும் வசப்படும் ! களத்தில் விவசாயப் பெண்கள் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

SEVAI – OFI திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நீர்நிலைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகளைப் பயன்படுத்தியும், மற்றும் மானாவாரி முறையிலும் பயிர் செய்வதில் உள்ள சவால்கள் மற்றும் வெற்றிகள் குறித்து விவாதிக்கும் வகையில் விவசாயி

மணப்பாறை பகுதி கிராமங்களைச் சேர்ந்த பெண் விவசாயிகள், நீர்நிலைகளை மேம்படுத்துதல் மற்றும் அதன் மூலம் உணவு உற்பத்தி மற்றும் பயிர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

SEVAI - OFI திட்டம்
SEVAI – OFI திட்டம்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

வறட்சியைத் தாங்கி வளரும் பயிர் ரகங்கள், மண் ஈரப்பதத்தைப் பாதுகாத்தல் மற்றும் குறைந்த செலவிலான இயற்கை விவசாய முறைகள் குறித்தும்; சீரற்ற மழையையும் மீறி, நிலப்போர்வை அமைத்தல் (mulching), ஊடுபயிர் சாகுபடி மற்றும் சரியான நேரத்தில் விதைத்தல் ஆகியவை எவ்வாறு தங்கள் விளைச்சலை மேம்படுத்தின என்பதைப் பற்றி விவசாயப் பெண்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.

இந்த கலந்துரையாடல், விவசாயிகளிடையே பரஸ்பர கற்றலை வலுப்படுத்தியதுடன், கூட்டு முயற்சியால் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதையும் ஊக்குவித்தது. நீர்நிலை மேம்பாட்டால் வளம் பெற்ற வறண்ட நிலப் பகுதிகளில், நிலையான வாழ்வாதாரத்திற்காக பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் விவசாய முறைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் நம்பிக்கையை இது பெண்களிடையே ஏற்படுத்தியது. விவசாயத் துறை நிபுணரான K. தேவேந்திரன் அவர்கள், அனுபவப் பகிர்வு மற்றும் பயிற்சிக்கான இக்கூட்டத்தை வழிநடத்தினார்.

—  கிருஷ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.