இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை விபத்து: மருத்துவமனையில் நேரில் ஆறுதல்!
பெரியபாளையத்தில் செயல்பட்டு வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில் 74 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 67 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்தேன்.
மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, மருத்துவர்களிடமும் சிகிச்சை நிலை மற்றும் உடல்நல முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தேன்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார், மத்திய சென்னை மாவட்ட தலைவர் கராத்தே செல்வம், திருவள்ளூர் பாராளுமன்ற பொறுப்பாளர் ஏ.ஜி. சிதம்பரம், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் கலீல் ரகுமான் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் திவாகர் ஆகியோர் உடனிருந்தனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.