“SOS Policing Sense of Safety” விழிப்புணர்வு பிரச்சாரம்
திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு “SOS Policing Sense of Safety” புதிய விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, மத்திய மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொருத்துவதற்கான செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. மண்டலத்திற்குட்பட்ட 9 சிசிடிவி கேமராக்களைப்
இத்திட்டத்தை அடித்தட்டு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில், மத்திய மண்டலத்தில் உள்ள 129 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 1147 கிராமங்களில் (திருச்சி 52, புதுக்கோட்டை 23, கரூர் 450, பெரம்பலூர் 151, அரியலூர் 76, தஞ்சாவூர் 186, திருவாரூர் 84 மற்றும் மயிலாடுதுறை 125) கூட்டங்கள் நடத்தப்பட்டன. கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், ஊர்ப் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
அதேபோல் பொதுமக்களின் பங்களிப்போடு பெண்கள் பாதுகாப்பு மற்றும் குற்றமில்லாச் சமூகத்தை உருவாக்கும் நோக்கில், சிசிடிவி கேமராக்கள் “வீட்டுக்கு ஒண்ணு – ரோட்டுக்கு ஒண்ணு” என்ற முழக்கத்தை காவல்துறை முன்வைத்துள்ளது. பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் வீடு அல்லது வணிக வளாகங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தும்போது, அதில் ஒரு கேமரா அவர்களது சொந்த பாதுகாப்பைக் கண்காணிக்கும் வகையிலும், இரண்டாவது கேமரா பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பிரதான சாலையை நோக்கியவாறு பொருத்தப்பட வேண்டும்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.