விமான நிலையத்தில் சிறப்பு அனுமதி ! எடப்பாடி மனம் குளிரச் செய்த பாஜக !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விமான நிலையத்தில் சிறப்பு அனுமதி ! எடப்பாடி மனம் குளிரச் செய்த பாஜக !

இந்தியா முழுவதுமுள்ள விமான நிலையங்களில், விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் ஓடுதளம் வரையில் தனது சொந்த வாகனத்தில் செல்வதற்கான ‘சிறப்பு’ அனுமதியை வழங்கியிருக்கிறது, விமான போக்குவரத்து துறை அமைச்சகம்.

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

பொதுவாக, விமான நிலையங்களில் இருந்து விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் ஓடுதளம் வரையில் சம்பந்தபட்ட விமான நிலையத்தின் பேருந்து சேவையைப் பயன்படுத்தித்தான் பயணிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு பயணித்த பொழுது, சக பயணி ஒருவர் எடப்பாடியை பார்த்து, ”அதிமுகவின் துரோகி” என முழக்கமிட்டதும், எடப்பாடியாரின் உதவியாளர் அவரது செல்போனை பறித்ததும் விவகாரமானது. இதனை தொடர்ந்து எடப்பாடி விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் எழுத, அவர்களும் தற்போது சிறப்பு அனுமதியை வழங்கியிருக்கிறார்கள்.

இத்தகைய சிறப்பு அனுமதி கடிதம் எழுதும் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. மிக மிக முக்கியமான பிரமுகர்களுக்கும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மட்டுமே வழங்கப்படும் நடைமுறை இது. மூன்று நாளைக்கு முன்னர்தான், ”அதிமுக பாஜகவின் அடிமை அல்ல” என்று பேட்டியளித்திருந்தார், எடப்பாடி பழனிச்சாமி. தற்போது, அவர் மனங்குளிரும்படியான, சிறப்பு பரிசை வழங்கியிருக்கிறது, பாஜக அரசு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.