இஸ்லாமியப் பெருமக்களிடம் ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ் !
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிவாசல்களில், மதச்சார்பற்ற கூட்டணிக் வேட்பாளரும் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று மாலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அமைச்சர் அவர்கள் இன்று மாலை பின்வரும் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களுக்குச் சென்று, தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியப் பெருமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
பெல் (BHEL) பாய்லர் ஆலை வளாகத்தில் உள்ள டவுன்ஷிப் பள்ளிவாசல், ஐ.டி.ஐ (ITI) அருகே உள்ள மதரஸ்த்துல்லா பஷீரய்யா பள்ளிவாசல், காந்திநகர் சாலையில் உள்ள நூர் பள்ளிவாசல். வாக்கு சேகரிப்பின் போது, திராவிட மாடல் அரசின் கடந்த ஐந்தாண்டு கால சாதனைகளை எடுத்துரைத்த அமைச்சர், குறிப்பாகப் பின்வரும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கினார்:
விடியல் பயணம்: மகளிருக்கான இலவசப் பேருந்து வசதி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம்.
பங்கேற்ற நிர்வாகிகள்:
இந்த நிகழ்வின் போது மாநகரச் செயலாளர் மதிவாணன், துவாக்குடி நகரச் செயலாளர் காயாம்பு, பெல் தொ.மு.ச. பொதுச் செயலாளர் தீபன், வட்டச் செயலாளர்கள் கருணாகரன், அப்பு (எ) கருணாநிதி, குத்தூஸ், அசாருதீன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் உடனிருந்தனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.