1330 குறள்களுக்கும் அவர் மிக எளிமையாக உரை எழுதியிருக்கிறார். அதற்கு முன்பாக 354 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு கதை வடிவிலும், நிகழ்வுகள் மூலமாகவும் கலைஞர் அளித்த விளக்கமே ‘குறளோவியம்’ எனும் சிறந்த படைப்பாகும்.
வசனக் கவிதைகள் வெளிவரத் தொடங்கி, புதுக் கவிதைகளாக வளர்ந்த காலத்தில், கவிதை போன்ற வசனங்களை எழுதி, திரைப்படங்களின் மூலம் பாமரர்களிடமும் தமிழுணர்வைத் தட்டி எழுப்பியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.