தியாகராஜன் மகனின் ‘சமந்தா’ லீலை!

- மதுரை மாறன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா ‘பாணா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். அதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நம்ம, சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா. தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு, தெலுங்குக் கரையோரம் ஒதுங்கிய சமந்தாவுக்கு அதன் பின் ஏறுமுகம் தான். நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு, சில ஆண்டுகள் குடும்பம் நடத்தி(?!) விட்டு சமீபத்தில் டைவர்சும் செய்தார் சமந்தா. இப்ப பழசும் புதுசும் கலந்த சங்கதி என்னன்னா, ‘பாணாகாத்தாடி’யை தயாரித்தது சத்யஜோதி பிலிம்ஸ். அப்போது படத்தின் எக்ஸ்கியூடிவ் தயாரிப்பாளர்களாக தியாகராஜனின் மகன்கள் செந்திலும் அர்ஜுனும் இருந்தனர்.

Apply for Admission

‘பா.கா.’வை ஆரம்பித்த போதே சமந்தாவைக் காதலிக்க ஆரம்பித்து படம் முடிவதற்குள் கல்யாணம் செய்து கொள்ளுமளவுக்கு போனார் அர்ஜுன். இதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார் தியாகராஜன். இது பழசு. இப்ப சமந்தா ஃப்ரீ பேர்டாக இருப்பதால், அர்ஜுனின் காதல் அம்பு மீண்டும் சமந்தாவை நோக்கிப் பாய ஆரம்பித்துள்ளதாம்.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.