இந்த வெற்றி மகிழ்ச்சி கொடுக்கவில்லை!
உண்மையில் இந்த வெற்றி மகிழ்ச்சி கொடுக்க வில்லை. திமுக ஆட்சியின் அவலங்களை ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர் என்கிற அடிப்படையில் தொடர்ந்து கண்டித்து வந்தோம். அவ்வளவே. அதற்காக இது போன்ற வெற்றியை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.
தமிழ்நாடு அரசியல் ரீதியாக முற்போக்கான மாநிலம் என்று பெயர் எடுத்து இருக்கிறது. இதனால் மற்ற மாநிலங்களில் ஒரு மரியாதை உண்டு. அது இனி கிடைக்குமா என்று தெரியவில்லை.
தொடர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்பது மட்டும் உண்மை. இளைய தலைமுறையிடம் சமூக நீதி, மேம்பாடு, வலது சாரி அரசியலின் ஆபத்து, சிவில் சமூகத்துக்கு இருக்க கூடிய நெருக்கடி, ஜென்சி தலைமுறையின் பிரச்சனைகள் குறித்து நிறைய உரையாட வேண்டி இருக்கிறது.
எனக்கு அரசியல் மாற்றத்தில் நம்பிக்கை இல்லை. சமூக மாற்றமே விடுதலையை தரும். தொடர்ந்து களமாடுவோம்.
— எவிடன்ஸ் கதிர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.