இடிந்து விழும் சோதனை சாவடி கட்டிடம் ! ஆபத்தான நிலையில் அதிகாரிகள் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சமலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள மூலக்காடு எனும் பகுதியில் உள்ள வனச் சோதனை சாவடி கட்டிடமானது, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிலையில், தற்போது கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து மேற்கூரையின் சுவர்கள் பெயர்ந்த நிலையிலும் , கட்டிடத்தில் உள்ளே உள்ள இரண்டு அறைகளும் மேல்புறம் தேங்கியுள்ள மழை நீரால் கட்டிடம் முழுவதும் ஈரம் காத்து உள்ளே யாரும் பணி செய்ய முடியாத அளவிற்கு, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்த வார அங்குசம் வார இதழில்…

மேலும் அந்த கட்டிடத்தில் உரிய அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் அதில் இரவு, பகல் என சுழற்சி முறையில் தங்கி பணிபுரியும் வனச்சரக அதிகாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் தெரிய வருகிறது. குடிநீர் வசதி, மேஜை நாற்காலிகள், கண்காணிப்பு கேமராக்கள் , கழிவறையுடன் கூடிய அடிப்படை வசதிகளுடன் விரைவில் புதிய கட்டிடம் அமைத்து தர வனத்துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.