தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று பழங்குடியின மாணவன் சாதனை….

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்ணாடு  ஊராட்சி சின்ன இலுப்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் கடந்த 2024 -25 ஆண்டு கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற தோனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார் மகன் பரத் என்பவர் தேசிய பல்கலைக்கழக சட்டக்கல்லூரி நடத்தும் பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் தேசிய சட்டக் கல்லூரி ஆனது இந்தியாவில்,

பெங்களூர், ஹைதராபாத் கல்கத்தா, ஜோக்பூர், ராய்ப்பூர், காந்திநகர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 24 இடங்களில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

பரத்
பரத்

Apply for Admission

இதில்  இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் படிப்பதற்காக CLAT என்று சொல்லக்கூடிய  பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வில் 28 பழங்குடியினர் பள்ளியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வில் திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் வண்ணாடு ஊராட்சியில் உள்ள தோனூர் கிராமத்தை சேர்ந்த பரத் என்ற மாணவன் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

இப்பகுதியில் உள்ள மக்கள் மாணவனை வெகுவாக பாராட்டியுள்ளனர் மாணவன் கூறுகையில் தாங்கள் மலை மக்கள் என்றும் தங்கள் பகுதி மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் இவர்களுக்குள் ஏற்படும் சட்ட பிரச்சனைகளை தீர்க்க ஒரு சட்ட வல்லுனர்கள் மட்டுமே முடியும் என்பதால் தான் மருத்துவம், பொறியியல், வேளாண்மை ஆகிய துறைகளை விடுத்து சட்ட படிப்பை தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார் இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு மாணவன் நன்றி தெரிவித்தார்.

குறிப்பு:  – இந்த மாணவர் தாய் இல்லாமல் தந்தையின் அரவணைப்பில் இரண்டு தம்பிகளுடன் பச்சைமலை பகுதியில்   வாழ்ந்து வருகிறார்.

– ஜோஷ்

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.