நாம் தற்போது பரவலாக பயன்படுத்தி வரும், RO வாட்டர் எனப்படும் (Re-verse Osmosis) தண்ணீர் சுத்தம் செய்யும் முறையில் சில நல்லதும், கெட்டதும் உள்ளது.
பொதுவாக, RO முறையில் நீரில் உள்ள தாதுக்கள் (Calcium, Mag-nesium, Sodium, போன்றவை) அதிகமாக நீக்கப்படுவதால் நீர் மிகவும் “சத்தற்றதாக” மாறும். இது நீண்ட காலம் தொடர்ந்து குடிக்கும் போது உடலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. நன்மைகள் என எடுத்துக் கொண்டால், RO முறையால் நீரில் உள்ள கிருமிகள், வேதியியல் மாசுகள், ஆலகர், விஷப்பொருட்கள் போன்றவை பெரும்பாலும் களைந்து விடப்படுகின்றன.
கடுமையான மாசுபட்ட குடிநீரை சுத்திகரிக்க RO மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தண்ணீரில் TDS (Total Dissolved Solids) அளவு அதிகமான இடங்களில் RO சுத்திகரிப்பு அவசியமாகிறது. இதன் பிரச்சினைகள் என எடுத்துக் கொண்டால், உடம்பிற்கு முக்கியமான தாதுக்கள் (கால்சியம், மெக்னீசியம்) 92-99% வரை நீக்கப்படுகின்றன. இதனால் நீண்ட நாட்கள் RO தண்ணீர் மட்டும் குடிப்பவர்கள் மத்தியில் தாது குறைவு, சோர்வு, தசைவலி, மற்றும் இருதய நரம்பு பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகம். சிறப்பு சுகாதாரபரிந்துரையில் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மட்டுமே RO நீர் பரிந்துரைக்கப்படுகிறது. சுத்தமான நகர்புற குழாய் நீரில் RO தேவையில்லை. சொல்வதென்றால், மிகவும் மாசுபட்ட நீரை பருக பயன்படுத்தும் போது அவசியமாகிறது. அதேசமயம் சுத்தமான நீரை RO முறையில் சத்தகரிக்கத் தேவையில்லை.
— பேரா. சா. அருள்






Comments are closed, but trackbacks and pingbacks are open.