அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

5 கோடி ‘லபக்’ செய்த விமல்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

5 கோடி ‘லபக்’ செய்த விமல்

நடிகர் விமல் தான் நடித்து, பாதியில் நிற்கும் ‘மன்னர் வகையறா’ படத்திற்காக சென்னை பெர வள்ளூரைச் சேர்ந்த கோபி என்பவரிடம் 5 கோடி கடன் வாங்கினார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

வாங்கிய கடனுக்கு, தான் தயாரிக்கும் ‘களவாணி-2’ படத்தின் தமிழக ரைட்சைக் கொடுப்பதாகவும் சொன்னார் விமல். ஆனால் அந்தப் படத்தைத் தயாரித்தது டைரக்டர் சற்குணம், பெருமளவில் ஃபைனான்ஸ் பண்ணியவர் அந்தப் படத்தின் வில்லனாக நடித்த தஞ்சையைச் சேர்ந்த ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதனால் அதிர்ச்சியான கோபி, 5 கோடியைக் கேட்டு விமலுக்கு நெருக்கடி கொடுத்தும் பலனில்லாததால், சென்னை கமிஷனிடம் விமல் மீது புகார் கொடுத்தார். கோபி புகார் கொடுத்த மறுநாளே கமிஷனர் அலுவலகம் சென்ற விமல், எனது எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் தான் என்ற புகாரைத் தட்டிவிட்டார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இதனால் கடுப்பான சிங்கார வடிவேலன், மறுநாளே கமிஷனர் அலுவலகம் சென்று, “தன் மீது நடந்து வரும் செக் மோசடி வழக்கை திசை திருப்பவும் கோபிக்குத் தரவேண்டிய பணத்தை அமுக்கும் விதமாகவும் என் மீது பழி போடுகிறார் விமல். எனவே சீட்டிங் பேர்வழியான விமல் மீது ஆக்சன் எடுங்க ப்ளீஸ்” என கம்ப்ளெய்ண்டைக் கொடுத்தார் சிங்காரவேலன்.

இதுகுறித்து சிங்காரவேலனிடம் நாம் பேசிய போது, “கொலைகாரனோ, திருடனோ, தான் செய்த குற்றத்தை என்னைக்காவது ஒத்துக் கொண்டி ருக்கானா? அது மாதிரி தான் விமலும். இதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒண்ணு ல்ல” என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.