சினிமாவில் விஜயாக மட்டும் இருந்தவருக்கு, அரசியலில் மட்டும் ஏன் ஜோசப் சேர்கிறது?
தேர்தல் கள ஆய்வில் இருக்கும் போது, ஒரு இளைஞரிடம் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டேன். விஜய்க்கு வாக்களிக்கலாம் எனக் கருதுகிறேன் என்றார். எதற்காக விஜய்க்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்றேன். நான் கிறிஸ்தவர், அவரும் கிறிஸ்தவர் என்பதால் வாக்களிக்கலாம் எனக் கருதுகிறேன் என்றார். இந்துக்கள் தங்களுக்கு வாக்களியுங்கள் எனக் கூறும் பாஜக பற்றி என்ன கருதுகிறீர்கள் எனக் கேட்டேன். அது தவறு. அது மதவெறிக்கட்சி. அதற்கு வாக்களிக்கக்கூடாது என்றார்.
நீங்கள் கிறிஸ்தவர் என்பதால் வாக்களிக்கப் போகிறேன் என்றீர்கள். அது சரி என்றால், இந்துக்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என பாஜக சொல்வது எப்படி தவறாகும் எனக்கேட்டேன். சிறிது நேரம் யோசித்துவிட்டு நான் யோசித்தது தவறு என்றார்.
அவர்கள் இந்துன்னு என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். இவர் கிறிஸ்தவர் என்று சொல்லி ஏமாற்றுகிறார். அவர்கள் இந்துக்களுக்கு எதுவும் செய்வதில்லை. இவரும் கிறிஸ்தவர்களுக்கு எதாவது செய்வது ஒருபுறம் இருக்கட்டும். கிறிஸ்தவராக எப்போது வாழ்ந்தார் என்றேன்.
சினிமாவில் விஜயாக மட்டும் இருந்தவருக்கு, அரசியலில் மட்டும் ஏன் ஜோசப் சேர்கிறது? அந்த அரசியலை யோசியுங்கள். விடை கிடைக்கும் என்றேன். மதம் என்பது தனிமனித விருப்பம். அதை அரசியலில் அடையாளப்படுத்தும் எவராக இருந்தாலும் அது சங்கித்தனம் தான் என்றேன்.
நன்றி சார் என்றார். மகிழ்ச்சி.
— சூர்யா சேவியர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.