தம்பியைக் கண்டுகொள்வாரா உதயநிதி?
தம்பியைக் கண்டுகொள்வாரா உதயநிதி?
கடந்த இருவாரங்களுக்கு முன்பு ரிலீசான அருள்நிதியின் ‘டி பிளாக்’ என்ற படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நெகடிவ்வாகவே இருந்தது. ஆனால் இந்த ஜூலை 22-ஆம் தேதி ரிலீசான ‘தேஜாவு’ என்ற படம் பாஸிட்டிவாக அமைந்ததில் அருள்நிதிக்கு மகிழ்ச்சி. ஆனால் அருள்நிதியின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரமோ, “மெகா பட்ஜெட் படங்களை வாங்கி தனது ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனம் மூலம் ரிலீஸ் பண்ணுகிறார் அண்ணன் உதயநிதி.
இப்பக்கூட சந்தானம் நடிச்ச ‘குலுகுலு’ படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணியிருக்கார். ஆனால் தனது தம்பி அருள்நிதியின் படங்களைத் தான் கண்டுக்க மாட்டேங்குறாரு. உதயநிதி மனசு வச்சா அருள்நிதியின் மார்க்கெட்டும் ஸ்டெடியாகும்” என்கிறார்கள்.