திருச்சி ரயிலில் 51 பவுன் நகை திருட்டு..
திருச்சி ரயிலில் 51 பவுன் நகை திருட்டு..
திருச்சி மத்திய ரயில் நிலைய இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொன்மலை முத்துமணி டவுன் அருகே கடந்த மாதம் 25/06/2021
இரவு 10 மணி அளவில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்த சேது அதிவேக விரைவு ரயிலில் பரமக்குடியை சேர்ந்த அமீர் ஹஜிரா எனும் பெண் பயணி பயணித்து வந்துள்ளார்.
அவருடைய பேக்கில் 51 பவுன் தங்க நகை இருந்ததாகவும், அதனை திருச்சி முத்துமணி டவுன் அருகே ரயில் வந்தபோது காணவில்லை என்று தெரியவர,
திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் 26/06/2021 அன்று புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த மாதத்தில் முத்துமணி டவுன் பகுதியில் இதேபோன்ற குற்ற செயல் நிகழ்ந்ததை அடுத்து மீண்டும் அடுத்த ஒரு குற்றச்செயல் அரங்கேறியுள்ளது.
– இந்தர்ஜித்