திருச்சி: ஜூன் 1 முதல்வர் விஜய் வருகை! போக்குவரத்து மாற்றம்!
pதமிழக முதல்வர் திருச்சி வருகையையொட்டி, நாளை ஜூன் 1-ம் தேதி மாநகரில் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
பேருந்து போக்குவரத்து:
காலை 10:00 மணி முதல் சத்திரம் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்ல அனுமதி இல்லை.
மத்திய பேருந்து நிலையம் & திருவெறும்பூர் பேருந்துகள்: காந்தி சிலை அருகில் பயணிகளை இறக்கிவிட்டுத் திரும்ப வேண்டும்.
திருவானைக்கோவில் பேருந்துகள்: மாம்பழச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டுத் திரும்ப வேண்டும்.
கரூர் மற்றும் பெரம்பலூர் பேருந்துகள்: புறவழிச்சாலை வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.
கனரக வாகனங்கள்:
காலை 07:00 மணி முதல் மதுரை, திண்டுக்கல் மற்றும் சென்னையிலிருந்து வரும் கனரக வாகனங்கள் மணப்பாறை, முசிறி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.