CM சார் இதெல்லாம் ஞாயமா ?.
CM சார் எப்போ மறுபடியும் கரூரில் கூட்டம் கூட்டுவிங்க நானும் கரூர் தான்.
எம் பொண்ணும் இரண்டு வருடங்காளாக போட்டித்தேர்வு எழுதுறா.
சிஎஸ்ஆர் என்ற போட்டி தேர்வு எழுதுதி பாஸ் செய்தா தான் PhD படித்தாலும் பயன் என்று தைவானில் phD படிக்க கிளம்பியவள் அந்த வாய்ப்பை விட்டுவிட்டாள்.
அடுத்த மாதமே ஹைத்ராபாத்தில் கோச்சிங் சென்ட்ரலில் சோர்ந்து ஹாஸ்டலில் தங்கி போட்டி தேர்வுக்கு படிச்சா அந்த ஊர் சமையலின் காரம் ஓத்துக்காம வயிறு புண்ணாகி மொழி தெரியா ஊரில் தனியா ஹாஸ்பிடல் தேடி அலைந்து என்று எத்தனையோ கஷ்டப்பட்டு படித்து ஐந்தே ஐந்து மார்க்கில் வெற்றியை இழந்தாள்.
“சிஸ்ஆர் பாஸ் பண்ணினா பேராசிரியராக எலிஜிபில் மட்டும் தான் ம்மா பேராசிரியர் வேலை உறுதி கிடையாது.
எப்படியும் கஷ்டப்பட்டு படிக்க தான் போறேன் அதுதான் குரூப் _1 படிக்கிறேன் பாஸ் பண்ணிட்டா வேலை என்று இப்போ ஒரு வருடமாக படிச்சுட்டு இருக்கா.
இந்த வருடம் பாஸ் பண்ணுவது கஷ்டம் மா இன்னும் போஷனையே கவர் பண்ணல அடுத்த வருடம் தான் பாஸ் பண்ண முடியும் என்கிறாள்.
இந்த வருடம் செப்டம்பரில் குரூப் _1 போட்டித்தேர்வு 26 இடங்களுக்கு குறைந்த பட்சம் 26 லட்சம் பேர் எழுதப்போறாங்க.
1 இடத்திற்கு 1 லட்சம் பேர் போட்டிட்போட போறாங்க.
இதில் பழைய சிலபஸ் வேற மாறிப்போகுது உலக அரசியல் பிரச்சினையால் வெளிநாட்டில் வேலை செய்தவர்கள் எல்லாம் இந்தியா வரப்போகிறார்கள்.
அவங்களும் இந்த வருடம் போட்டிப்போட போறாங்க என்றெல்லாம் புலம்புகிறாள்.
MSC வேதியியல் படித்து 90% மார்க் வச்சுட்டு இவ்வளவு மனவுளைச்சலில் பிள்ளைகள் இருக்காங்க.
நானும் கரூர் தான் அந்த கூட்டத்தில் கலந்து நான் செத்திருக்கலாம்.
என் பிள்ளை இவ்வளவு கஷ்டப்பட்டதுக்கு அரசாங்க வேலை ஈசியா கிடைத்திருக்கும்
CM சார் எப்போ கரூர் வாறிங்க
— காவியா சேகரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.