ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்….
மதுரை மாநகராட்சியில் 100க்கும் மேற்பட்ட வார்டுகளில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே ஒன்று கூடி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதால் சம்பளம் மிகவும் குறைந்த அளவே தரப்படுகிறது. அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற தொடர்ந்து போராடி வருகிறோம். புதிதாக பதவியேற்றுள்ள மதுரை மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் தினந்தோறும் புதுப்புது உத்தரவுகளைப் பிறப்பித்து துப்புரவுப் பணியாளர்களை துன்புறுத்தி வருகிறார்.
உதாரணத்திற்கு குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை எனப் பிரிக்க வேண்டும் என உத்தரவுப் போடுவதோடு சரி ஆனால் பணியாளர்களுக்குத் தேவையான கையுறையோ, காலுறையோ, பாதுகாப்பு உபகரணங்களோ தருவதில்லை. குப்பைகளை அள்ள போதுமான வாளிகளோ குப்பைத் தொட்டிகளோ இல்லாமல் பணியாளர்கள் சிரமப்படுகிறார்கள். மாநகராட்சி குப்பை வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களையும் பல ஆண்டுகளாக தற்காலிகப்பணியாளர்களாக வேவைத்துள்ளார்கள் ஓட்டுநர்கள் பணியையும் நிரந்தரப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.