வகுப்பறை பசி போக்கும் ஃபீடிங் இந்தியா !
திருச்சி மாவட்டத்தின் ஊரகப்பகுதியான பெட்டவாய்த்தலையில் அமைந்துள்ள சேவை சாந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ‘ஃபீடிங் இந்தியா’ திட்டத்தின் ஆதரவுடன் 1,300 மாணவர்களுக்கு இலவச சத்தான காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டிகளை வழங்கிவருகிறது.
இதன் மூலம், மாணவர்களின் வளர்ச்சிக்கும் கற்றலுக்கும் அவசியமான கலோரிகள், புரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது. வகுப்பறைப் பசியைப் போக்குவதோடு, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இரத்தசோகையைக் குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், மற்றும் ஆபத்தில் உள்ள மாணவர்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் காலமுறை உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் சுகாதாரக் கண்காணிப்பு மூலம் உடல் வளர்ச்சிக்கு உதவுதல் ஆகியவற்றை இது செய்கிறது.
பள்ளி முதல்வர் சித்ரா பாலசுப்பிரமணியன், நிர்வாக அலுவலர் ஜனதாமணி, திட்டப் பொறுப்பாளர் மாளவிகாவனி ஆகியோர், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுடன் இணைந்து, இந்த உணவு வழங்கும் திட்டத்தை ஒவ்வொரு நாளும் திறம்பட நடத்துவதற்குத் தேவையான அர்ப்பணிப்பையும் மேற்பார்வையையும் வழங்குகிறார்கள்.
— கிருஷ்






Comments are closed, but trackbacks and pingbacks are open.