பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு செய்த திருச்சி ஆசிரியை கைது !

0

பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  திருச்சி ஆசிரியை  போக்சோவின் கைது !

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் தேவி ( 40 )  இவர் துறையூர் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். துறையூர் பகுதியில் ஒரு வீடு எடுத்து வசித்து வருகிறார்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

கருத்து வேறுபாடு காரணமாக அவரும் அவரது கணவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார். இந்த நிலையில்  அவரிடம் 10 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவரின் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த பெற்றோர், தனது மகனின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

அப்போது அந்த மாணவர் ஆசிரியர் உடன் பேசியதில் இருந்து, படிப்பில் கவனம் இல்லாததும் அந்த மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பு சார்பில் ஆசிரியை மீது முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.அதன் பெயரில்  முசிறி மகளிர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி ஆசிரியையை தேவியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அந்தப் அந்த மாணவர் குழந்தைகள் நல காப்பதிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் இந்த சம்பவம் அந்தப் பகுதியிலே பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

முந்தைய செய்திகள்..  படிக்க….

திருச்..சீ…சீ… மாநகரில் இடுகாட்டின் இழிநிலை ! அதிகார திமிர் !

https://angusam.com/the-infamy-of-idugat/

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.