காவிரி தாய்க்கு சிறப்பு ஆராதனை – விவசாயிகளுக்கு அழைப்பு

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

காவிரி தாய்க்கு சிறப்பு ஆராதனை. விவசாயிகள் பங்கேற்க வேண்டுதல் குறித்து அயிலை சிவசூரியன், வயலூர் ராஜேந்திரன் ஒருங்கிணைப்பாளர்கள் தொிவித்துள்ள  அறிக்கையில்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பாகுதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு 3 ஆம் நாள் முக்கொம்பு வரும்போது திருச்சி மாவட்ட விவசாயிகள் சார்பாக காவிரியில் விதைநெல் மற்றும் மலர்கள் தூவி காவிரி தாய்க்கு சிறப்பு செய்வது வழக்கம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

காவிரி நீர் திறப்புஇந்த ஆண்டு கடந்த 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து காவிரி பாசன பகுதிக்கு தமிழக முதல்வர் அவர்களால் திறக்கப்பட்ட தண்ணீர் நாளை 14-.06-2025 சனிகிழமை காலை முக்கொம்பு  வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நாளை காலை சரியாக 10.மணிக்கு முக்கொம்பு காவேரி பாலத்தில் விதைநெல் மற்றும் மலர்கள் தூவி காவிரி தாய்க்கு சிறப்பு ஆராதனை செய்யப்படும்.

இந்நிகழ்வில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பு செய்ய வேண்டுமாய் அயிலை சிவசூரியன், வயலூர் ராஜேந்திரன் ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.