நல்ல நடிகனாக , தயாரிப்பாளராக இருக்க நினைக்கின்றேன் – சிவகார்த்திகேயன்
ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் கல்லூரிக்கு போகாமல், பட்டப்படிப்பு படிக்காமல், ஒரு குடும்ப நிர்வாகத்தை பார்த்துக் கொள்ளும் பெண்கள் இந்தியாவில் அதிகம் உள்ளார்கள். இந்த திரைப்படம் ஹிட் ஆகி வேறு இடத்தில் வெளியானாலும் இது ஒரு Pan India திரைப்படம்தான் இடையூறு தருபவர்கள் யார் என்று எல்லோரும் கேட்கிறார்கள் அதை வெளியில் சொன்னால் யூடியூபில் அதிக views தான் கிடைக்கும் மற்றவரை குறை சொல்வதற்காக நான் இது போன்ற கருத்துகளை சொல்லவில்லை இதையெல்லாம் தாண்டி ஒரு திரைப்படத்தை செய்கின்றோம் என்பதை தான் இதன் மூலம் சொல்கிறேன்.
சினிமா அரசியலை பார்த்து விட்டீர்கள் மக்களுக்கான அரசிலை பார்பீர்களா?
படத்தில் அரசியலை பற்றி பேசுவோம் தவிர அதைப்பற்றி எனக்குத் தெரியாது. நான் நடிகனாக ஒரு நல்ல நடிகனாக இருக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளராக நல்ல ஒரு தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
சினிமாவில் பொழுதுபோக்கு தாண்டி அரசியல் கருத்துகள் அதிகளவில் புகுக்கப்படுகிறதா?
எல்லா காலகட்டத்திலும் அரசியல் இருந்துள்ளது. அது தப்பு ஒன்றும் இல்லை REFLECTION OF SOCIETY ஆக தான் சினிமா இருந்துள்ளது. நடிகர் அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா?
நான் குட்டியாக ஒரு கம்பெனி வைத்து படம் தயாரித்து கொண்டிருக்கின்றேன். அவ்வளவு பெரிய கம்பெனியாக நாம் என்றும் வளரவில்லை. நாம் வளர்ந்து அஜித் சார் ஒப்புக் கொண்டால் செமையாக செய்வோம். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக தான் இருக்கும். அது ஒரு கனவு தான் என்றார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.