இனிய ஈகை திருநாள் – ஈதுல் ஃபித்ர் நல்வாழ்த்துக்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
பச்சிளங் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஈவு இரக்கமில்லாமல் போர் என்ற பெயரில் கொல்லப்பட்டுவரும் இன்றையச் சூழலில், சோகம் மனங்களில் நிறைந்திருந்தப் போதிலும், “சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்!” என்ற வாக்கிற்கு ஏற்ப, தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, சகோதரப் பாசத்தை தனது வாழ்வியலாக்கிக் கொண்டவர்கள் அன்பும், அமைதியும், சமாதானமும் அனைவரிடமும் நிலைத்து இருக்க வேண்டும் என்று நோன்பிருந்து, அதன் நிறைவாக தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பெருநாளில் ஆரத்தழுவி வாழ்த்துச் சொல்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.

வெறுப்புணர்வை விதைக்க நினைப்பவர்களின் தீய நோக்கம் நிறைவேறாது. அனைவரின் உள்ளங்களிலும் சகோதரத்துவம் நிலைத்து இருக்கும். அன்பு பெருகும், அமைதி நிலைக்கும்.
இனிய ஈகைத் திருநாள் – ஈதுல் ஃபித்ர் நல்வாழ்த்துகள்
தோழமை அன்புடன்,
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை








Comments are closed, but trackbacks and pingbacks are open.