வாக்காளர்களை ஏமாற்றிய சுந்தா் சி ! ஆவணங்களை வெளியிட்ட வழக்கறிஞா் !
மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி 2021 இல் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட குஷ்பூ இருவரும் தங்களது சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் வருமானங்களை மறைத்து வாக்காளர்களை ஏமாற்றிய குற்றம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் மோசடி குறித்த ஆவணங்கள் வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ரூ. 604 கோடி சொத்துக்களை மறைத்த இயக்குனர் சுந்தர் சி. 180 கோடி ரூபாய் வரி கட்டாமல் ஏமாற்றி உள்ளவர் எப்படி மக்களுக்கு உண்மையாக இருப்பார் என கேள்வி எழுப்பினார்.
மதுரை சிவில் சமூகத்தின் சார்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களை சந்தித்தபோது இயக்குனர் மத்திய தொகுதி அதிமுக பாஜக வேட்பாளர் சுந்தர் சி மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பூ ஆகியோர் சுந்தர் சி தாக்கல் செய்த வேட்பு மனுவில் பார்ம் 26 பரிசீலிக்கும் போது 64கோடி வருமானத்தை இருவரும் சேர்ந்து மறைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவனி சினி மேக்ஸ், அவனி மூவிஸ், அவனின் டெலி மீடியாஸ் என மூன்று நிறுவனங்களை நடத்தியுள்ளனர். அதன் மூலம் அரண்மனை உள்ளிட்ட 22 படங்கள் 10 சீரியல்கள் தயாரித்துள்ளனர். இதன் மூலம் சுமார் 604கோடி ரூபாய் ஈட்டி உள்ளதை மறைத்து 180 கோடி ரூபாய் வரி கட்டாமல் ஏமாற்றியுள்ளனர்.
இவ்வாறு ஏமாற்றியவர் எவ்வாறு மக்களுக்கு உண்மையாக இருப்பார் என்றும் வாஞ்சிநாதன் கேள்வி எழுப்பினார். 2021 தேர்தலில் போட்டியிட்ட குஷ்புவும் இவற்றை மறைத்துள்ளதாக தெரிவித்தார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.