பயணிகள் வெயிலில் கடும் அவதி…!
போளூர் நகராட்சி பேருந்து நிலையம் விரிவாக்கம் பணி காரணமாக பயணிகள் நிழர் கூடம் மற்றும் இருக்கைகள் அகற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரத்தில் உள்ள பேருந்து நிலையம் விரிவாக்க பணி ஒரு ஆண்டுக்கு முன்னார் இடிக்கப்பட்டது.
பேருந்து நிலையம் விரிவாக்க பணி தொடங்கி ஓராண்டு ஆகியும் இன்னும் முடிவடையாததால் பயணிகள் வெயிலில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
அக்னி வெயில் தொடங்காத நிலையில் கடும் வெப்பம் நிலவி வருவதால் வெளியூருக்கு செல்லும் பயணிகள் பள்ளி விடுமுறை முடிந்து ஊர்களுக்கு செல்லும் குழந்தைகள் பேருந்துக்காக வெயிலில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
பேருந்து நிலையம் விரிவாக்க பணி முடியும் வரை தற்காலிக நியர் கூடம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.