தொடரும் ரோட்டரியின் அர்ப்பணிப்பு !
திருவண்ணாமலை ரோட்டரி மாவட்டம் 3231 ஏற்பாட்டில், முற்றிலும் குளிரூட்டப்பட்ட வழிபாட்டு கூடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாநகராட்சி, திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் மற்றும் ஏற்றம் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து திருவண்ணாமலை செங்கம் சாலை எமலிங்கம் அருகில் நவீன எரிவாயு தகனமேடையை – “மோட்ச தீபம்” பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அற்பணித்தார்கள்.

இதனை தொடர்ந்து, மாவட்ட ரோட்டரி குடும்பத்தின் பங்களிப்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் தொடங்கிவைத்தும் ரோட்டரி இண்டர்நேஷனலின் துணைத்தலைவரும், எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தார்.
கருணையுடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் ஒரு அத்தியாவசியமான குடிமைத் தேவையை நிவர்த்தி செய்து, வாழ்விலும் அதற்கு அப்பாலும் கண்ணியத்திற்கான வாழ்வை முழுமை பெறச்செய்வதில் ரோட்டரியின் அர்ப்பணிப்பு சிறந்த முன்னுதாராணமாக அமைந்திருக்கிறது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.