திருவானைக்கோவில் பகுதியில் திவிர பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளா் ஆர் மனோகரன்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர் மனோகரன் இன்று மாலை 5 மணி முதல் திருவானைக்கோவில் நான்கு கால் மண்டபம் மாரியம்மன் கோவில் நெல்சன் ரோடு பர்மா காலனி அண்ணா நகர் சக்தி நகர், சிங்கர்கோவில் அம்பேத்கார் நகர் குடிசை மாற்று வாரியம் செக்போஸ்ட் கணபதி நகர் 1வது தெரு இரண்டாவது தெரு அகிலா நகர் தாதாச்சாரியார் தோப்பு கோலமாவு தெரு சீ கே வி அப்பார்ட்மெண்ட் ஆகிய பகுதிகளில் கழக வெற்றி வேட்பாளர் அவர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா அவர்கள் வெற்றி வேட்பாளர் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி ஆர் மனோகரன் அவர்களை ஆதரித்து திருவானைக்கோவில் பகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திருவானைக்கோவில் பகுதி கழக செயலாளர் டைமன் திருப்பதி ஸ்ரீரங்கம் பகுதிகளாக செயலாளர் சுந்தர்ராஜன் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் நெல்சன் ரோடு வீரக்குமார் பிரகாஷ் செல்வம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் முரளிதரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெஸ்ட் பாபு ஸ்ரீரங்கம் பிஜேபி ரகு பிஜேபி மாவட்ட செயலாளர் குங்கும சுந்தரி ஸ்ரீரங்கம் பொதுக்குழு உறுப்பினர் திருமதி பிரியா சிவக்குமார் தாகூர் தெரு ரமேஷ் வி என் ஆர் செல்வம் டைமண்ட் ரங்கன் கரிகாலன் எஸ் பி ஆனந்தராஜ் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.