செப்டிக் டேங்க் விஷவாயு பலி ! இழப்பீடு வழங்க ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தல்!
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த வடுகர் பேட்டை அண்ணைநகர் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் செப்டிக் டேங்கில் சுத்தம் செய்வதற்காக கும்பகோணம் பகுதி நாச்சியார் கோவிலை சேர்ந்த கணேஷ் (25) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ்குமார் (26) ஆகியோர் 12 அடி ஆழமுள்ள செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம் செய்வதற்காக பணியில் ஈடுபட்ட பொழுது இருவரும் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல்கள் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது உடல்கள் ஊருக்கு செல்வதற்கான உரிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்வதோடு இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை திருச்சி மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடை பணியில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் கையுறைகள் வழங்கப்பட்டிருப்பதை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் உறுதிப்படுத்துவதோடு தொழிலாளிகளின் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
க. சுரேஷ்
திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலாளர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.