மதுபானங்கள் விற்க தடை விதிப்புக்கு நேற்று சொன்ன காரணங்கள் இன்று மறுக்கப்படுகின்றன. மதுப்பிரியர்களின் தாகம் தணித்து அவர்களையும் அரவணைக்கும் தாயுள்ளம் போற்றுதலுக்குரியது.
நேற்றைய தடைக்கான காரணம்: FSSAI அதிகாரிகள் நடத்திய ஆய்வில், இந்த மதுபானங்களில் அனுமதிக்கப்படாத செயற்கையான சுவையூட்டும் பொருட்கள் மற்றும் மணமூட்டிகள் (Adding Natural Identical and Artificial Flavoring Substance) சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறி தடை விதிக்கப்பட்டது.
இன்று விலக்கப்பட்டதற்கான காரணம் (நிறுவன விளக்கம்): லேபிளிங்கில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் குறைபாடுகள் மற்றும் பெயரிடல் (Incorrect product nomenclature / Product Labelling Issue) காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்; அது உணவுப் பாதுகாப்புச் சார்ந்த பெரிய குறைபாடு இல்லை என்பதால் முறையான விளக்கத்திற்குப் பிறகு 24 மணி நேரத்திற்குள் தடை விலக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நிகழ்ந்தது மாற்றம். இன்று நடந்தது மாற்றத்தின் மாற்றம். மாற்றம் ஒன்றே மாறாதது என்ற தத்துவத்தில் இயங்கும் விஜய் அரசு.
— தயாளன் சண்முகா






Comments are closed, but trackbacks and pingbacks are open.