அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கருத்து வேறுபாடு தனிப்பட்ட பகையாக மாறலாமா?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கருத்து வேறுபாடு என்பது மனிதர்களின் எண்ணப் பலவகைமை (Diversity of Thought). அது ஒருபோதும் தனிப்பட்ட பகையாக மாறக் கூடாது. இந்தக் கூற்று முற்றிலும் உண்மையானது மற்றும் முதிர்ந்தது.

மனித மூளை வெவ்வேறு அனுபவங்கள், வளர்பு முறைகள் மற்றும் நிலைமைகளால் அமைகிறது. எனவே, ஒரு பொருளை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணங்களில் பார்பது இயல்பானது. இந்த எண்ணப் பலவகைமை (Diversity of Thought) புதிய கண்டுபிடிப்புகளுக்கும் மக்கள் வளர்சிக்கும் வழிவகுக்கிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

மாற்றுக் கருத்துக்கள் தனிப்பட்ட பகையாக மாறாமல் தடுக்க 5 முக்கிய வழிகள்:

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

  1. விவாதத்தை மட்டும் கவனியுங்கள் : நபரை விடுத்து, அவர் சொல்லும் கருத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள்.
  2. புரிந்துகொள்ள முயலுங்கள் : எதிராளியின் கருத்தை ஏற்பதும் தள்ளுவதும் உங்கள் உரிமை. ஆனால் அவர் ஏன் அப்படி நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயல்வது நலமானது.
  3. அன்பான சொற்களைப் பயன்படுத்துங்கள் : “உங்கள் கருத்து தவறானது” என்று சொல்வதை விட, “என் பார்வையில் இது வேறு மாதிரி தெரிகிறது” என்று சொல்லலாம்.
  4. மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள் : எல்லாரும் நம்மைப் போலவே எண்ண வேண்டும் என்று எதிர்பார்பது உறவுகளில் விரிசலை உண்டாக்கும்.
  5. மௌனமாக கேட்கும் பழக்கத்தை வளர்துக் கொள்ளுங்கள் : பதில் சொல்ல அவசரப்படாமல் முழுசா கேட்டு முடியுங்கள். அப்போது தான் எதிராளியின் கோணம் உண்மையாக புரியும், சண்டை விவாதமாக மாறும்.

யாவரும் கேளீர்

நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது சக ஊழியர்களுடன் பழகும்போது இந்த எண்ணப் பலவகைமை நமக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும். இந்தக் கருத்தை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் நமக்கு வேண்டும்.

ரெ குமரப்பா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.