லவ்வர்க்கு மட்டும் தான் முத்தம் கொடுப்பியா? 17 வயது சிறுமியிடம் சில்மிஷம் ! போக்சோவில் ஒரு எஸ்.ஐ. 3 ஏட்டு கைது ! நடந்தது என்ன ?

காசுக்கு பதிலாக முத்தம் கொடு என்று சொல்லிக்கொண்டே அந்த சிறுமியின் கழுத்தை பிடித்து இழுத்து..........

1

லவ்வர்க்கு மட்டும் தான் முத்தம் கொடுப்பியா? 17 வயது சிறுமியிடம் சில்மிஷம் ! போக்சோவில் ஒரு எஸ்.ஐ. 3 ஏட்டு கைது ! நடந்தது என்ன ?

17-வயது சிறுமியிடம் பாலியல் ரீதியில் அத்துமீறிய பயிற்சி உதவி ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையோரம் அமைந்துள்ள முக்கொம்பு குறிப்பிடத்தகுந்த சுற்றுலாத்தளங்களுள் ஒன்று. தனது ஆண் நண்பருடன் முக்கொம்புக்கு சுற்றுலா வந்த இடத்தில், உடன் வந்த ஆண் நண்பரை துரத்திவிட்டு 17-வது இளம்பெண்ணை காரில்  வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள் மேற்படி பயிற்சி எஸ்.ஐ. உள்ளிட்ட நான்கு போலீசாரும்.

பாதிக்கப்பட்ட 17-வயது சிறுமி ஜீயபுரம் போலீசு நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்குள்ளான ஜீயபுரம் காவல் நிலைய பயிற்சி எஸ்.ஐ சசிகுமார், நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத், ஜீயபுரம் போக்குவரத்து காவல் நிலைய காவலர் சித்தார்த், திருவெறும்பூர் காவல் நிலைய காவலர் சங்கரபாண்டி ஆகிய 4 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.பி. வருண் குமார்
எஸ்.பி. வருண் குமார்

தனிப்படையைச் சேர்ந்த பயிற்சி எஸ்.ஐ. உள்ளிட்ட நான்கு போலீசாரும் குடிப்பதற்காகவும் – ஆற்றில் குளிப்பதற்காகவும் நேற்று (04.10.23) மாலையில் எவ்வித அனுமதியோ, விடுப்போ உயரதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் சொல்லாமல்  சாதராண உடையில் சென்ற ஜீயபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார் (2021 Batch) (சொந்த ஊர் – திருப்பூர்), நவல்பட்டு காவல்நிலையத்தை சேர்ந்த காவலர் 258 பிரசாத்; (2018 Batch) (சொந்த ஊர் – கடலூர்), திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து எண்-6 ல் பணிபுரிந்த முதல் நிலை காவலர் 725 சங்கர் ராஜபாண்டியன் (2013 Batch) (சொந்த ஊர் – புதுக்கோட்டை), ஜீயபுரம் போக்குவரத்து காவல்நிலைய விட்டோடி காவலர் 1827 சித்தார்த்தன், (2021 Batch) (சொந்த ஊர் – கடலூர்)  திருச்சி மாவட்ட எஸ்.பி.யின் தனிப்படையில் அங்கம் வகிப்பவர்கள் என்ற பழக்கத்தின் அடிப்படையில் ஒன்றாக , Honda என்ற சிகப்பு கலர் ( TN55BC6631 )காரில் சென்றிருக்கின்றனர். அவர்கள் சென்ற காரிலே அமர்ந்து மதுவும் அருந்தியிருக்கின்றனர்.

முக்கொம்பு
முக்கொம்பு

அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது ஆண் நண்பரும் முக்கொம்பு போலீஸ் ஒ.பி.க்கு அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்திருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட நால்வரும் அவர்களிடம் விசாரணை என்ற பெயரில்,  வீட்டிற்கு தெரிந்து வந்திருக்கிறீர்களா? வீட்டுக்கு போன் போட்டு சொல்லவா? என்றெல்லாம் மிரட்டியிருக்கின்றனர். பின்னர், காரில் எஸ்.ஐ. இருக்கிறார் அவரிடம் விசயத்தை சொல் என்று சிறுமியை மட்டும் அழைத்து சென்று காரில் ஏற்றியிருக்கின்றனர்.  ஏறியவுடன் உள்ளே இருந்த எஸ்.ஐ. பைன் கட்டிறீயா ? இல்ல நாங்க சொல்றதை செய்றீயா என்று மிரட்ட, உடனே அந்த சிறுமி நான் என்ன செய்யனும் என்று கேட்க, காசுக்கு பதிலாக முத்தம் கொடு என்று சொல்லிக்கொண்டே அந்த சிறுமியின் கழுத்தை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்திருக்கிறார்,  அப்போது அந்த சிறுமி, அண்ணா என்னை விடுறுங்க அண்ணா என்று கெஞ்சியிருக்கிறார்,  உடனே அந்த போலிஸ் உன் லவ்வருக்கு மட்டும் தான் முத்தம் கொடுப்பியா ? நான் கேட்டா கொடுக்க மாட்டியா ? ஒரே ஒரு முத்தம் கொடு உன்னை விட்டுறேன்.. என்று அந்த சிறுமியின் தாவாவை பிடித்து இழுத்திருக்கிறார், உடனே அந்த சிறுமி பயந்து போய் அழ… சத்தம் போட்ட அவ்வளவு தான்.. என்று மிரட்டிய எஸ்.ஐ. நான் போன் பண்ணினாலும் நான் சொல்ற இடத்துக்கு வரனும், இல்லன்னா, உன்னையும் உன் லவ்வரையும் 7 வருசம் ஜெயிலுக்கு அனுப்பிடுவேன் என்று மிரட்ட எப்ப கூப்பிட்டாலும் வரேன் என்று அந்த சிறுமி பயந்து அழுதிருக்கிறார், அச்சிறுமியிடம்  சுற்றி வலைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

ஜீயபுரம் காவல்நிலையம்
ஜீயபுரம் காவல்நிலையம்

பொதுவில் சுற்றுலாத்தளம் என்றாலும், முக்கொம்புக்கென்றே தனி பெயரும் இருக்கிறது. காவிரி ஆற்றங்கரையோர பூங்காக்களும் அடர்ந்த மர நிழல்களுமான அந்த சூழலை சில இளம் ஜோடிகள் தனிமையில் அத்துமீறுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வது வழக்கமான ஒன்று. இதற்காகவே, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் ஜோடிகள் முக்கொம்புவைத் தேடிச் செல்வதாகவும் சொல்கிறார்கள். வழக்கமாக இதுபோன்று சம்பவங்களில் பொதுவில் யாரும் வெளியில் சொல்லமாட்டார்கள் என்ற தைரியமும்; போலீசார் என்ற திமிரிலும்தான் இந்த அத்துமீறலை துணிந்து செய்திருக்கின்றனர்.

லவ்வர்க்கு மட்டும் தான் முத்தம் கொடுப்பியா 17 வயது சிறுமியிடம் சில்மிஷம்!
லவ்வர்க்கு மட்டும் தான் முத்தம் கொடுப்பியா 17 வயது சிறுமியிடம் சில்மிஷம்!

அப்போதைக்கு அவர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என்று சென்றவர்கள் பின்னர், ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். இப்புகார் பற்றிய விவரம் எஸ்.பி.யின் கவனத்திற்கு சென்றதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் திருவெறும்பூர் மற்றும் முசிறி டி.எஸ்.பி.க்கள் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அதில், காக்கிகள் நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டதையடுத்தே தற்போது கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக போலீசாரே அத்துமீறலில் ஈடுபட்டிருக்கும் இந்த சம்பவத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு; பணியிடை நீக்கம்; சிறையிலடைப்பு என அதிரடி நடவடிக்கைகளால் சற்று ஆறுதல் வழங்கியிருக்கிறார் மாவட்ட எஸ்.பி.வருண்குமார். குற்றமிழைக்கும் காக்கிகள் விசயத்தில் இதுபோன்ற பாரபட்சமற்ற நடவடிக்கைகள் தொடரவேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்!

– ஆதிரன்.

1 Comment
  1. பெரியம் பள says

    சிருமி எதற்க்கு ஆண் நன்பனுடன் தனியாக பூங்கவுக்கு வந்தார்.

Leave A Reply

Your email address will not be published.