பாட்டிலுக்கு கூடுதல் ரூ.10 கேட்கும் ஊழியர்கள் ! வாக்குவாதத்தில் மதுப்பிரியா்கள் !
பாட்டிலுக்கு ரூ10/-கூடுதலாக வைத்த டாஸ்மாக் ஊழியர் பத்து ரூபாய்க்கு பாட்டிலில் புதிதாக ஸ்டிக்கர் ஒட்டிய டாஸ்மாக் நிறுவனம் மது பிரியர்கள் டாஸ்மாக் ஊழியர்களுடன் வாக்குவாதம்…
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹர்விபட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடை 5512 அருள்மிகு ஆண்டவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் சுமார் 500 மீட்டர் உட்பட்ட அமைந்துள்ளது என இதனை அகற்றக்கோரி பொதுமக்கள் வற்புறுத்தி உள்ளனர்.
மேலும் இந்த கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்து அந்த பத்து ரூபாய்க்கு பாட்டில் புதியதாக ஸ்டிக்கர் ஒட்ட சொல்லுவதாக கடையின் மேற்பார்வையாளர் முருகன் மதுவாங்க வந்தவர்களிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்ட மதுபிரியர்கள் ஆத்திரத்துடன் பத்து ரூபாயை திருப்பி அளிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மதுபிரியர்களுக்கும் கடையின் மேற்பார்வையாளர் முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பள்ளி வளாகத்திற்கு 500 மீட்டர் உட்பட்டு இந்த கடை இயங்கி வருவதால் இதனை அகற்ற கோரியும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அப்படியும் இந்த அரசாங்கம் இந்த டாஸ்மாக்கை அகற்றவில்லை என்றால் அடுத்த கட்டமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் ஒன்று கூடி பஸ் மறியல் போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.