முதல் உயிரை வாங்கிய FQL மோசடி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

FQL முதலீட்டு மோசடி: நத்தம் அருகே இளைஞர் தற்கொலை

நத்தம் அருகே காசம்பட்டி பகுதியில் FQL செயலி மூலம் முதலீடு செய்து பணத்தை இழந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

FQL செயலி மூலம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் எனக் கூறப்பட்டதை நம்பி பலர் பணம் முதலீடு செய்ததாகவும், பின்னர் செயலி செயல்படாமல் போனதால் முதலீட்டாளர்கள் பணத்தை இழந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்நிலையில், காசம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் FQL முதலீட்டில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வல்ல..

மன அழுத்தமா? அழைக்க – 104

—   ஷாகுல்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.