அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பசுமைத் திருச்சி…!சுற்றுச்சூழலுக்கு உகந்தது…!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மாவட்டத்தில் பசுமைத் திருச்சி, சுற்றுச்சூழலுக்கு உகந்தது’ என்ற நோக்கத்தின் கீழ் காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் காவல் அலுவலகத்தில் உள்ள காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் காகிதங்களை இரண்டாவது முறையாக கரூரில் உள்ள புகழுர் காகித ஆலைக்கு அனுப்பி 880 Reams Xerox பேப்பர் பண்டல்கள் பெறப்பட்டது.

திருச்சி மாவட்டம் காவல் துறை சார்பாக, “பசுமைத் திருச்சி, சுற்றுச்சூழலுக்கு உகந்தது” என்ற நோக்கத்தின் கீழ் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இகாப, அவர்களின் சீரிய முயற்சியின் கீழ் Xerox பேப்பர் தட்டுப்பாட்டை குறைக்க கடந்த வருடம் இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் தேவையில்லாத காகிதங்கள் எடை போட்டு மாவட்ட ஆயுதப்படையில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதன் அடிப்படையில் அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் காகிதத்தாள்கள் என மொத்தமாக 21 மெட்ரிக் டன் மற்றும் 220 கிலோ சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட பழைய காகிதங்களை புகழூர் காகித ஆலைக்கு அனுப்பி அதற்கு பதிலாக Xerox பேப்பர் பண்டல்கள் வாங்குவதற்கு அங்குள்ள அதிகாரிகளிடம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசி பழைய காகிதங்களையும் ஆலையில் ஒப்படைத்து, அதன் எடை மதிப்பிற்கு ஏற்றவாறு 1220 Reams Xerox பேப்பர் பண்டல்கள் பெறப்பட்டு அவரவர் கொடுத்த பழைய காகிதத்திற்கு ஏற்றார் போல் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

 அதேபோல், இரண்டாவது முறையாக இந்த வருடமும் ‘பசுமைத் திருச்சி, சுற்றுச்சூழலுக்கு உகந்தது’ என்ற நோக்கத்தின் கீழ் கடந்த ஒரு வாரமாக, திருச்சி மாவட்டத்தில்லுள்ள அனைத்து காவல் நிலையங்கள். சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்கள் முழுவதும் காகித மறுசுழற்சி மற்றும் புதிய காகிதக் கட்டுகள் வாங்குவதைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மொத்தம் 17.544 டன் பழைய காகிதங்களும், பதிவேடுகளும் சேகரிக்கப்பட்டு கடந்த (17.04.2026) அன்று கரூர் மாவட்டத்திலுள்ள புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) அனுப்பி அதன் எடை மதிப்பிற்கு ஏற்றவாறு 860 Reams Xerox பேப்பர் பண்டல்கள் பெறப்பட்டு அவரவர் கொடுத்த பழைய காகிதத்திற்கு ஏற்றார் போல் அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்கள்களில் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

இது போல இனிவரும் காலத்திலும் இதே நடைமுறை பின்பற்றபடும் என்றும், இதன்மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மரங்களை வெட்டுவதைக் குறைக்கவும். இயற்கை வளங்களை பாதுகாக்கவும் இம்முறை வசதியாக இருக்கும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும், இதனால் அலுவலகங்களை சுத்தமாக வைப்பதற்கும், இடப்பற்றாக்குறையைப் குறைப்பதற்கும் ஏதுவாக உள்ளது என அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.