குறட்டை விட்டு தூங்குகிறதோ, நெடுஞ்சாலைத்துறை?
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் தாலுகா அந்தஸ்து பெற்று பல வருடங்கள் ஆகிவிட்டது. பூதலூரில் இருந்து தஞ்சாவூருக்கு செல்ல கள்ளப்பெரம்பூர் வழி மற்றும் சித்திரக்குடி- கரம்பை வழியாக என இரண்டு வழிகள் இருக்கின்றன. இந்த இரு வழித்தடங்களை பயன்படுத்தி திருக்காட்டுப்பள்ளி இலால்குடி வரையில் செல்லலாம். சித்திரக்குடி வழியாக செல்லும் பேருந்தில் பெரும்பாலும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பயணிக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் சாலை வசதி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதுதான் கொடுமை. தார்ச்சாலை என்று சொல்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. குறிப்பாக, சித்திரக்குடி மாரியம்மன் கோவில் அருகில் சாலையின் குறுக்கே உருவான பள்ளம் பல ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது. திருவையாறு சட்டமன்ற தொகுதியில் உள்ள இந்த பிரச்சினை 6-வது முறையாகவும் எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் துரை.சந்திரசேகரனுக்கு தெரியுமா? நெடுஞ்சாலைத்துறையினரின் கவனத்துக்காவது சென்றதா? ஒரு பள்ளத்தை சரி செய்ய எத்தனை ஆண்டுகள்?
— தஞ்சை. க.நடராசன்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.