எப்படி இந்த வெற்றி – என்ன நடந்தது..!
இரண்டு கழகங்களும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளும் வேண்டாம் என்கிற எதிர்ப்பு மனநிலை +
படத்திற்கு 200 கோடி வருமான வாய்ப்பு இருக்கும் உச்ச நடிகர் அதை விட்டுவிட்டு மக்களுக்குத் தொண்டாற்ற வருகிறேன் என்றதில் மக்களுக்குக் கிடைத்த நம்பிக்கை +
திரை மூலம் வளர்த்து வைத்திருந்த அளவுக்கு அதிகமான வெறித்தனமான ரசிகர்கள் +
குழந்தைகளை குடும்பத்தில் அடம் பிடித்து ஓட்டுப் போடச் சொல்லுமாறு சொன்ன தேர்தல் உத்தி +
அதன்படி தங்கள் பிள்ளைகள் சொன்னதற்காக வாக்களித்த குடும்பத்தினர் +
தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகள் எந்தக் கட்சியில் யாருக்குத்தான் இல்லை என்று எதார்த்தமாக எடுத்துக்கொண்ட பெண்களின் மனநிலை +
எதிர்கட்சிகளும், சாதகமான ஊடகங்களும் சில வீடியோ பதிவுகளை வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் தவெக தொண்டர்கள் எல்லோருமே தற்குறிகள் என்கிற கருத்தை உருவாக்கியதால் ஏற்பட்ட வெறுப்பு +
இதெல்லாமும் சேர்ந்துதான் விஜய்க்கு முதல் தேர்தலிலேயே இத்தனை பெரிய வெற்றியைத் தந்திருக்கிறது.
அதே சமயம் ஆட்சியை நிம்மதியாக அமைக்கும் அளவிற்கான பெரும்பான்மைக்கு ஒரு செக் வைத்திருக்கிறார்கள் மக்கள்.
அதிக எண்ணிக்கையில் வென்ற வகையில் விஜய்க்குதான் கவர்னர் அழைப்பு விடுப்பார்.
பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கொடுப்பார். அடுத்த சில தினங்கள் பரபரப்பான சம்பவங்கள் நிகழும் என்பது மட்டும் உத்தரவாதம்.
பட்டுக்கோட்டை பிரபாகர்
எழுத்தாளர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.