அதற்கு நல்ல ஞானமும், திறமையும் வேண்டும் !
ஜேசன்சஞ்சய்யின் நேர்காணல் பார்த்தேன். மிகத்தெளிவாக இயல்பாக பேசுகிறார். திறமையும், ஆற்றலும் உள்ளது என்பது அவரது நேர்காணலில் தெரிகின்றது. அவரது படிப்பு, அனுபவம், ஆர்வம் அனைத்தும் பளிச்சிடுகிறது.
ஆனால், அவரது நேர்காணலில் ஒரு ஹாலிவுட் படத்திற்கான கதாநாயகனாக தமிழ் சினிமாவிலிருந்து யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்டபோது அவரது அப்பாவை சொன்னார். அது ஒரு சபை நாகரீகத்திற்கான பொய் என்பது எளிதாக புரிகின்றது.
அந்த நேர்காணலில் அவர் மற்ற இடங்களில் யுவன் சங்கர் ராஜாவையும், நடிகர் ஆர்யாவையும் புகழ்ந்து பேசுவதன் மூலமாக சிறந்த தமிழ் ஹீரோவாக ஆர்யாவை தேர்வு செய்து வைத்துள்ளார் என்றே கருதத் தோன்றுகிறது.
ஒரு படம் இயக்கியுள்ள மகன் கூட தெள்ளத் தெரிவாக டக்டக் என ஒரு அழகான பேட்டியை கொடுத்துவிட்டார். ஆனால் , அப்பா நடிப்புத்துறையிலும், அரசியல்துறையிலும் அதிர்ஷ்டத்தால் மட்டுமே வெற்றி பெற்றுள்ளளார் என்பதால் அவரால் எப்போதும் ஒரு இயல்பான பேட்டி கொடுக்கவே முடியாது.
ஏனென்றால், அதற்கு நல்ல ஞானமும், திறமையும் வேண்டும்.
– பிரபு ஜீவன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.