மே.28-ல் வருகிறான் ‘காட்டாளன்’
2024-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மார்கோ’ படத்தை தொடர்ந்து கியூப்ஸ் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷெரீப் முகம்மது தயாரித்துள்ள படமான ‘காட்டாளன்’ உலகமெங்கும் மே 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி எஸ் சினிமா இண்டெர் நேஷனல் நிறுவனத்தின் லெனின் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.
பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்டாளன்’ காட்டில் நடக்கும் கடத்தல் சம்பவங்களை திரையில் காட்டுகிறது.
‘காட்டாளன்’ படத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், கபீர் சிங், சுனில், சித்திக், பரத் திவாரி, ராஜ் திரன்தாசு, ஹரிஷங்கர் நாராயணன், ஆன்சன் பால் மற்றும் சந்தீப் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பெப்ஸி மற்றும் எகசெட் ஆகிய இரண்டு யானைகள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளன. உரிய அனுமதி பெற்று, விலங்குகளை துன்புறுத்தாமல் நிஜ யானைகள் இப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
இசை : ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவு: ரேனா திவே, எடிட்டிங் :ஷமீர் முகம்மது, பிஆர்ஓ: நிகில் முருகன். தமிழ் மற்றும் மலையாளத்தில் நேரடியாக உருவாகி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.