அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு…!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளரும் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பரப்புரை நடைபெற்ற இடங்கள்:

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

பொன்மலைப் பகுதிக்குட்பட்ட வார்டு எண்கள் 45 மற்றும் 45A-வில் அமைந்திருக்கும்:கல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், மூகாம்பிகை நகர், திருநகர், பெரியார் நகர், பொன்மலைப்பட்டி, மொராய் சிட்டி, எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் திறந்த நிலையில் உள்ள ஜீப்பில் சென்றபடி அமைச்சர் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

உரையின் சிறப்பம்சங்கள்:

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

பரப்புரையின் போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ், கடந்த ஐந்து ஆண்டுகளில் கழக அரசு செயல்படுத்திய சாதனைத் திட்டங்களையும், குறிப்பாக அந்தந்த வார்டுகளில் நிறைவேற்றப்பட்ட உட்கட்டமைப்புப் பணிகளையும் விரிவாக எடுத்துக் கூறினார். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பங்கேற்ற நிர்வாகிகள்:

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், பகுதிக் கழகச் செயலாளர் தர்மராஜ், வட்டக் கழகச் செயலாளர்கள் தமிழ்மணி, முருகானந்தம், மாமன்ற உறுப்பினர் சித்தாலட்சுமி முருகானந்தம் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.