முதல்வர் மகளை கடத்த போவதாக மர்ம நபர்கள் மிரட்டல்..

0

உங்கள் மகளை கடத்தப் போகிறோம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மர்ம நபர்கள் இமெயில் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

டெல்லியில் ஆம் ஆத்மி  கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால்  முதல்வராக  பதவி வகித்து வருகிறார். இவரது அலுவலகத்துக்குக் கடந்த 9ம் தேதி இமெயில் ஒன்று வந்துள்ளது. அதில், ‘உங்கள் மகள் ஹர்ஷிதாவைக் கடத்தப் போகி றோம். அவரைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று எழுதப்பட்டிருந்தது.

 

இந்த மிரட்டல் இமெயில் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், ஹர்ஷிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இந்த  மெயிலை யார், எங்கிருந்து அனுப்பியது என்பது குறித்து தில்லி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர்  மகளை கடத்த போவதாக மிரட்டல் வந்துள்ளது தில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.