கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் !
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்த தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத தமிழக கவர்னரை கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமை தாங்கினார்.
வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் கே.ஆர்.ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல் வரவேற்று பேசினார்.
காங்கிரஸ் மூத்த செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இதில் சிறுபான்மை பிரிவு மாநில முதன்மை துணைத் தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார்,முன்னாள் மாவட்ட தலைவர் புள்ளம்பாடி ஜெயப்பிரகாஷ், இளைஞர் காங்கிரஸ்மாநில பொதுச் செயலாளர்கள் அபுதாஹீர், விஜய் பட்டேல்> மாவட்ட பொருளாளர் முரளி, கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய், அழகர்,மலர் வெங்கடேசன், ஜெயம் கோபி, ஐ.டி. பிரிவு லோகேஷ் , அரிசி கடை டேவிட், மகளிர் காங்கிரஸ் ஷீலா செல்ஸ், மாரீஸ்வரி, அஞ்சு , ஆராய்ச்சி பிரிவு தலைவர் விஜய் கே. பாண்டியன், அமைப்புசாரா தலைவர் மகேஷ் என்கிற மகேந்திரன், மாவட்ட மனித உரிமை துறை தலைவர் எஸ்.ஆர் ஆறுமுகம், மாணவரணி நரேன்,வார்டு தலைவர் ஜாகிர் உசேன், வடக்கு மாவட்ட பொருளாளர் இளையராஜா,மீனவர் பிரிவு வக்கீல் தனபால் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.