ரேபிஸ் தொற்று நாய்களிடம் இருந்து மட்டுமல்ல!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கீரிப்பிள்ளை கடித்த சிறுவன் மூன்று மாதங்கள் கழித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறுவன் இறந்திருக்கிறார்.

அவரைப் பிரிந்து வாடும் அவர்தம் பெற்றோர் உற்றார் உறவினருக்கு ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்திய பழுப்பு நிற கீரிப்பிள்ளை என்பது ( ஹெர்பெஸ்டிஸ் எட்வர்ட்சி Herpestes edwardsi)  இந்தியா முழுவதிலும் காணப்படும் இனமாக இருக்கிறது.

இது சிறிய அளவு பாலூட்டி இனங்கள், பறவைகள், ஊர்வன, பழங்கள், பூச்சிகள்  போன்றவற்றை உண்டு வாழ்கின்றன.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

ரேபிஸ் தொற்றுகள்
ரேபிஸ் தொற்றுகள்

குழிகளில் வாழ்ந்து வருடத்தின் அனைத்து நாட்களிலும் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை.

இந்த கீரிப்பிள்ளை இனம் என்பது ரேபிஸ் வைரஸின் புகலிடமாக இருக்கின்றன.

பொதுவாக இந்தியாவில் பதிவு செய்யப்படும் ரேபிஸ் நோய்க்கு 95% நாய்களிடம் இருந்து பரவும் ரேபிஸ்  காரணமாக இருக்கின்றது என்றாலும் அதற்கடுத்த நிலையில், பூனை, கீரிப்பிள்ளை உள்ளிட்டவை வருகின்றன .

இதுவரை இந்தியாவில் இந்த கீரிப்பிள்ளை இனத்தால் 92 ரேபிஸ் தொற்றுகள் ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டியது இதைத் தான் நாய்களிடம் இருந்து மட்டுமன்று பூனைகள், கீரிப்பிள்ளைகளிடம் இருந்தும் ரேபிஸ் தொற்று பரவலாம். வனாந்திர பகுதிகளில் வசிக்கும் கீரிப்பிள்ளைகள் கடித்தால் அதை மூன்றாம் வகை தீவிர கடியாகக் கருத்தில் கொண்டு ,

கடிபட்ட இடத்தை சோப் போட்டு பதினைந்து நிமிடங்கள் நன்றாகக் கழுவ வேண்டும்.

ரேபிஸ் தடுப்பூசி அதனுடன் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ரேபிஸ் தொற்றுகள் ரேபிஸ் தடுப்பூசியை அட்டவணைப்படி

0 நாள்

3ஆம் நாள்

7 ஆம் நாள்

28 ஆம் நாள் கட்டாயம் நிறைவு செய்திட வேண்டும்.

ரேபிஸ் வைரஸ் உடலுக்குள் சென்றதில் இருந்து நரம்புகள் வழியாக மேலேறி மூளையை அடைவதற்கு சில வாரங்கள் சில மாதங்கள் ஆகலாம். சராசரியாக 30 முதல் 90 நாட்கள்.

இந்தச் சிறுவனுக்கும் கீரிப்பிள்ளை கடியால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு அதனால் 90 நாட்கள் கழித்து நோய் நிலை ஏற்பட்டு மரணித்திருக்கலாம்.

தற்கால சூழ்நிலையில் பிள்ளைகள் வெளியே விளையாடும் போது விலங்குகளால் அது நாயோ பூனையோ மற்றும் விலங்குகளாலோ கடிபட்டால் உடனே பெற்றோரிடம் கூறுமாறு வளர்க்க வேண்டும்.

பெற்றவர்களும் இத்தகைய கடி ஏற்பட்ட சூழ்நிலையில் அரசு மருத்துவமனைகளுக்கு விரைந்து முறையான சிகிச்சை ( தடுப்பூசி ) பெறச் செய்ய வேண்டும்.

சுய மருத்துவம் / மெடிக்கல் ஷாப் மருத்துவம் உயிரைக் கொல்லும். எனவே, கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்படுவோம்.

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.