பெருசா யோசிங்க … பாதியில தோத்தாலும் பரவாயில்லை !
சமூகத்தை வளப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளைக் கொண்ட தனிநபர்களை அங்கீகரிக்கும் , எக்ஸெல் குழுமத்தின தனித்துவமான முன்னெடுப்பான SEYAL- EXCEL AWARDS 2026 விருது வழங்கும் விழா, கோயம்புத்தூர் லெ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த திறமையான விவசாயி வல்லுவன், சீனிவாசன் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனர் பொறியாளர் ஜி. சீனிவாசன், வாக்கரூவின் நிறுவனர் நௌஷாத், நம்மது நம்பிக்கையின் நிறுவனர் – ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா, மற்றும் டிஎன்சி சிட்ஸ் அமைப்பின் தலைவர் இளங்கோவன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறப்பு விருது சந்திரமாரி குழுமத்தின் தலைவர் முரளிகுமாருக்கு வழங்கப்பட்டது. MAFOI பாண்டியராஜன், கிரிக்கெட் வீரர் T நடராஜ், CIEL ED ஹேமலதா, GKM குளோபல் சர்வீசஸ் நிறுவனர் CAG கார்த்திகேயன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
“உங்கள் வாழ்க்கையை இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். ஒன்று நாம் பாராட்டு பெறுவது. மற்றொன்று, பாராட்டு அளிப்பது. உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும். பெரியதாக யோசிங்க… பாதியில தோத்தாலும் பரவாயில்லை…” என்பதாக தன்னம்பிக்கை உரையால் அரங்கை நெகிழ வைத்தார், எக்ஸெல் குழுமத்தின் தலைவரும், ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத்தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.