டெய்லரிடம் 20 இலட்சத்தை ஏமாற்றிய பிரபல பட்டு நிறுவன முதலாளி !
திருச்சி கிழேதார் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது (43). இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரும் பிரபல பட்டு வணிக நிறுவனத்தின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் சந்து முகமது உடன் தொழில் முறையில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் சந்து முகமதுவை அணுகி அவர்களுக்கு அந்தி கோவில் தெருவில், சொந்தமாக கடையுள்ளதாகவும் அதை வாடகைக்கு விட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்க; அந்த கடையை சந்து முகமதுவே வாடகைக்கு எடுத்துக் கொள்வதாக பேசி ஒப்புகொண்ட ரூபாய் 26 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோரிடம் கொடுத்திருக்கிறார்.
அதன்பிறகே, அந்தக் கடை அவர்களுக்கு சொந்தமானது இல்லை என்ற விவரம் தெரிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார் சந்து முகமது. பணத்தை தொடர்ந்து திருப்பிக்கேட்டும், வெறும் ஆறரை இலட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு, மிச்சம் 20 இலட்சத்தை திருப்பித்தராமல் ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில், கோட்டை குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததையடுத்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.